தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அரசின் பாசன வேளாண் திட்டம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்: மதுரையில் நடைபெற்றது

 

மதுரை, ஜூன் 30: தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் 2017 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், வேளாண்மைக்குத் தேவையான நீர் மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்தி, விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில் முனைவோருக்கான சந்தை வாய்ப்புகள் விரிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக வங்கி நிதி உதவி மற்றும் தமிழக அரசின் பங்குடன் சேர்த்து ரூ.2,961 கோடியில் செயலி்பாட்டில் உள்ள இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் 47 ஆறுகளின் துணை படுகைகளில் உள்ள 2,626 குளங்கள், 355 தடுப்பணைகள், 5,026 கி.மீ தூர நீர்வழித்தடங்கள் மற்றும் கால்வாய்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் 34 மாவட்டங்களில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பலனடைந்துள்ளனர். இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் இத்திட்டம் குறித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திட்ட அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை இணைந்து நேற்று மதுரை, தெப்பக்குளம் பகுதியில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பங்கேற்றோர் பறை இசை, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், மாடு ஆட்டம், மரக்கால் ஆட்டம் உள்ளிட்டவை வாயிலாக இத்திட்டத்தின் பயன்கள் மற்றும் இதில் விவசாயிகள் எவ்வாறு பலனடையலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த கலை நிகழ்ச்சிகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

 

Related News