தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கும்பகோணம் அருகே மாம்பழங்களின் ஊட்டச்சத்து குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கும்பகோணம், ஜூலை 23: கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் தேசிய மாம்பழ தினத்தை முன்னிட்டு மாம்பழங்களின் ஊட்டச்சத்தை உணர்த்தும் விதமாக மாணவ மாணவிகள் மாம்பழம் போல் வேடமடணிந்து அதில் நிறைந்துள்ள சத்துக்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22ம் தேதி தேசிய மாம்பழ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நேற்று கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில் புறவழிச்சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தேசிய மாம்பழ தினத்தை முன்னிட்டு எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி மாணவர்கள் மாம்பழ உடை அணிந்து அழகாக தோற்றமளித்தனர். மேலும் மாம்பழம் குறித்த பாடல்களுக்கு நடனமாடியும், மாம்பழங்களின் ஊட்டச்சத்தை உணர்த்தும் விதமாக மாணவ, மாணவியர்கள் மாம்பழம் போல் வேடம் அணிந்து அதில் உள்ள சத்துக்கள் பற்றி எடுத்துரைத்தனர்.

அப்போது பள்ளியின் கலையரங்கத்தில் பல்வேறு மாம்பழ வகைகளான ருமானி, ஒட்டு, மல்கோவா, நீலம், பங்கனப்பள்ளி போன்றவற்றை அழகாக வைத்து அலங்காரம் செய்து இருந்தனர். மாம்பழத்தில் பல்வேறு உருவ பொம்மைகளை செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர்கள் கார்த்திகேயன், பூர்ணிமா கார்த்திகேயன், மாணவ,மாணவியர்களும், ஆசிரிய பெருமக்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.