தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு விளம்பரம்: பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் முடிவு

முத்துப்பேட்டை, மே 26: அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு விளம்பரம் செய்வது என்று எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் தலைவர் சண்முகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. தலைமையாசிரியர் அமுதராசு, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நாகராஜன், கௌரவ தலைவர் வீரையன், திமுக முன்னோடி துரையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நல்லாசிரியர் மணி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தங்கதுரை, முன்னாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் தட்சிணாமூர்த்தி, பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2024 - 25ம் கல்வி ஆண்டிற்கான தமிழக அரசின் சலுகைகளை பயன்படுத்தி அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்ப்பது, அரசுத் தேர்வு எழுதும் மாணவர்களை நூறு சதவிதம் தேர்ச்சி அடைய பாடுபடுவது, பழுதடைந்த பள்ளி கட்டிடம் மற்றும் சத்துணவு கூடங்களை அப்புறப்படுத்துவது, 10, 11, 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை பள்ளி திறப்பு அன்று பாராட்டுவது , பொதுமக்கள் பார்வைக்கு டிஜிட்டல் பேனர் வைத்து மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்துவது, மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்து மாணவர்களை அதிக அளவில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் முடிவில் உதவி தலைமை ஆசிரியர் இந்திரா நன்றி கூறினார்.

Advertisement

Advertisement

Related News