தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து விழிப்புணர்வு

 

Advertisement

ஊட்டி, ஜூலை 23: உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பான விழிப்புணர்வு வாகனம் மூலம் முதல் 10 நாட்களுக்கு நீலகிரி மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படவுள்ளது.

இந்த வாகனத்தை நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், ‘வாருங்கள், செறிவூட்டப்பட்ட அரிசியை பற்றி அறிந்து கொள்வோம்” என்ற வாசகங்கள் பொருத்தப்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடையே வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி நடமாடும் விழிப்புணர்வு வாகனத்தின் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்ட குறும்படத்தினை பார்வையிட்டார். இந்நிகழ்வில், மாவட்ட உணவு பாதுகாப்பு (ம) மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ராகவன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News