தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அவினாசி ரோடு மேம்பாலம் பணி; கோவை எம்.பி. நேரில் ஆய்வு

 

Advertisement

கோவை, ஜூலை 21: கோவை மாநகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி கேட்டுக்கொண்டதன்பேரில், கோவை தொகுதி எம்.பி. கணபதி ராஜ்குமார் நேற்று பீளமேடு பகுதியில் அவிநாசி ரோடு மேம்பால பணிகள் குறித்து ஆய்வுசெய்தார். இங்குள்ள, விளாங்குறிச்சி ரோடு-அவிநாசி ரோடு சந்திப்பில் மேம்பாலம் ஏறுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், பீளமேடு முழுவதும் வியாபாரிகள், தனியார் நிறுவனத்தினர், மாணவ, மாணவிகள், சிறு குறு தொழில் செய்வோர் என பலதரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த ஏறுதளத்தை மாற்றுஇடத்தில் அமைக்க வேண்டும் என கவுன்சிலர் சித்ரா வெள்ளிங்கிரி கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, மக்களை பாதிக்காத வகையில் ஏறுதளத்தை உயர்த்த முடியுமா? அல்லது அணுகு சாலையின் அகலத்தை உயர்த்த முடியுமா? என கணபதி ராஜ்குமார் எம்.பி. நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். நில எடுப்பு நடவடிக்கை முடிந்தவுடன் மீண்டும் நேரில் ஆய்வு செய்த பின்னர் அடுத்தக்கட்ட பணிகளை தொடங்கலாம் என்றும் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் சமுத்திரக்கனி, உதவி கோட்ட பொறியாளர் அகிலா ஆகியோரிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, மதிமுக மாவட்ட துணை செயலாளர் பயனீர் தியாகு, பீளமேடு பகுதி செயலாளர் எஸ்.பி.வெள்ளியங்கிரி, திமுக பகுதி செயலாளர் துரை செந்தமிழ்செல்வன், வார்டு செயலாளர் மாடசாமி, மாவட்ட பிரதிநிதி பூவே துரைசாமி, வார்டு பிரதிநிதி சதீஷ் கோகுல் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Advertisement

Related News