தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மூலகொத்தளம் பகுதியில் 2 வளர்ப்பு நாய்கள் கடித்து ஆட்டோ டிரைவர் படுகாயம் : வீடியோ வைரல்

தண்டையார்பேட்டை, ஜூன் 4: மூலகொத்தளம் பகுதியில் ஆட்டோ டிரைவரை, 2 நாய்கள் விரட்டி விரட்டி கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மூலக்கொத்தளம் சிதம்பரம் நகரை சேர்ந்தவர் முத்து (43), ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு சவாரி முடிந்து, வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்திய முத்து, கீழே இறங்கியுள்ளார். அப்போது 2 சிறுவர்கள் அழைத்து வந்த 2 வளர்ப்பு நாய்கள், திடீரென முத்து மீது பாய்ந்து கடித்துக் குதறியது. அதிர்ச்சியடைந்த அவர் அலறி கூச்சலிட்டபடி ஓட்டம் பிடித்தார். ஆனாலும், அந்த நாய்கள் விரட்டி விரட்டி கடித்தது.

Advertisement

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அந்த நாய்களை விரட்டிவிட்டு முத்துவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் முத்துவுக்கு சிகிச்சை அளித்தனர். புகாரின் பேரில், வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்ததில், மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாய்கள் என்பதும், அவரது மகன்கள் வாக்கிங் அழைத்துச் சென்றபோது முத்துவை கடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நாய்கடி சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆட்டோ டிரைவர் முத்துவை, 2 வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Related News