தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகர்கோவில் மாநகராட்சியில் பழைய பொருட்கள் ஏலம் தள்ளிவைப்பு

நாகர்கோவில், அக். 22: நாகர்கோவில் மாநகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் உள்பட பல பழைய பொருட்களை ஏலம் விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. 3 தொகுப்பாக இந்த ஏலம் நடத்தப்படும், அதற்கான ஏலம் நேற்று(21ம் தேதி) நடத்தப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பழைய பொருட்களை ஏலம் எடுப்பதற்காக பல வியாபாரிகள் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். ஆணையர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்ட பெட்டியில் ஏலம் பிடிப்பதற்கான டிடி எடுத்து அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து போட்டனர். காலை 11 மணிக்கு அந்த பெட்டியை மாநகராட்சி அதிகாரிகள் எடுத்தனர்.

Advertisement

அதன்பிறகும் ஏலத்தில் கலந்து கொள்வதற்காக பல வியாபாரிகள் வந்தனர். அவர்கள் காலை 11.30 மணி வரை பெட்டி வைக்கப்பட்டு இருக்கும், ஏன் 11 மணிக்குள் பெட்டியை எடுத்தனர் என கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா அங்கு வந்தார். அவரிடம் ஏலத்தில் கலந்துகொள்ள முடியாத வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து ஆணையர் வருகிற 4ம் தேதி ஏலத்தை தள்ளி வைத்தார். இதனை தொடர்ந்து ஏலத்தில் கலந்துகொள்ள வந்த அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் மாநகராட்சி அலுவலகததில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News