தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு கணவன் 2வது திருமணத்தால் விரக்தி

திருவண்ணாமலை, ஜூலை 9: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கலசபாக்கம் தாலுகா படிஅகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலு மனைவி சிவகங்கா(40). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக நேற்று சிவகங்கா வந்திருந்தார். அப்போது, திடீரென பிளாஸ்டிக் பாட்டிலில் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணெய் எடுத்து ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் விரைந்துச் சென்று தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தன்னையும் தன் குழந்தைகளையும் கவனிக்காததால் விரக்தி அடைந்து தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். மேலும், கணவர் மீது நடவடிக்கை எடுத்து, தனது வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட போலீசார், தீக்குளிக்க முயற்சிப்பது சட்டப்படி குற்றம் என எச்சரித்து அனுப்பினர். கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.