தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நூறுநாள் வேலையை முடக்க முயற்சி: ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம், ஜூன் 11: நூறுநாள் வேலையை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ராஜபாளையத்தில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பஸ் நிலையம் முன்பு தமிழ்மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 100 நாள் வேலை சம்பளம் பாக்கியை வழங்க வேண்டும், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வரதராஜன் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் அமுல்ராஜ், திருப்பதி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் கணேசமூர்த்தி, ஏஐஒய்எப் மாவட்ட செயலாளர் வக்கீல் பகத்சிங், நகர செயலாளர் அய்யணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க நினைக்கும் மோடி அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தொகையை கொடுக்க மறுக்கிறது. 100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு சம்பளம் பாக்கியை வழங்கவில்லை. குடும்பத்தில் கடன்சுமை அதிகரித்து அவதிப்படுவதை தடுக்க நடவடிக்க எடுக்க வேண்டும். மேலும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். நூறு நாளை 200 நாளாக உயர்த்தி வேலை வழங்க வேண்டும். சம்பளத்தை ரூ.700 உயர்த்த வேண்டும். தொழிலாளர்களுக்கு இலவச பட்டா வழங்கி வீடுகட்டி கொடுக்க வேண்டும். திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும் என கோஷமிட்டனர்.

Advertisement

Related News