தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கும் விண்ணப்பிக்கலாம்; ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம்

நாகர்கோவில், ஜூலை 7: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வீடு வீடாக விநியோகம் நாளை (8ம் தேதி) முதல் நடைபெறுகிறது. குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற, ஊரகப் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் வரும் 15ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை நடக்கிறது. மாவட்டத்தில் மொத்தம் 341 முகாம்கள் நடத்தப்படும். நகர்புற பகுதிகளில் 176, ஊரகப் பகுதிகளில் 165 முகாம்களும் நடைபெறும்.

நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகக் சென்று முகாம் நடக்கும் நாள், இடம் குறித்த விவரங்கள், பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள் சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர்.

இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாமிற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே பெறப்படும். விண்ணப்பங்கள் மீது 45 நாளில் நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் குறித்த விபரங்கள் பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம், தகவல் கையேடு வழங்கும் பணி வரும் 8ம் தேதி (நாளை) முதல் தொடங்க உள்ளது. இந்தப் பணி 3 மாதம் தொடர்ச்சியாக நடக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News