தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூலூரில் கலைஞர் உருவச்சிலை அமைவிடம்; கனிமொழி எம்பி பார்வையிட்டார்

 

Advertisement

சூலூர், பிப்.11: சூலூரில், கலைஞர் உருவச்சிலை அமைவிடத்தை கனிமொழி எம்பி பார்வையிட்டார். கோவை மாவட்டம், சூலூர் அருகே கணியூர் ஊராட்சியில் கருணாநிதியின் உருவச்சிலையும், 106 அடி உயர கொடி கம்பமும் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கை குழு தயாரிப்பு தொடர்பான பணிகளுக்காக கோவை வந்த திமுக எம்பி கனிமொழி நேற்று சிலை அமைவிடத்தை பார்வையிட்டார்.

சிலை அமைப்பு பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் தளபதி முருகேசனிடம் கேட்டு அறிந்தார். மேலும், சிலை மற்றும் கொடிக்கம்பம் அமைக்க நடந்து வரும் பணிகளை பார்வையிட்ட கனிமொழி சிறப்பாக அமைக்கும் வகையில் பணிகள் துரிதமாக நடைபெற வேண்டும் என திமுக நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.

அப்போது அவருடன் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், திருப்பூர் எம்எல்ஏ செல்வராஜ், மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்திய மனோகரன் மற்றும் கணியூர் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி உள்ளிட்டோர் இருந்தனர். தொடர்ந்து, பணிகள் தொடர்பான வரைபடங்களை பொறியாளர் பசுமை நிழல் விஜயகுமார் கனிமொழியிடம் காண்பித்து விரிவாக எடுத்துரைத்தார்.

Advertisement