தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் பரபரப்பு வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர் போலீசாருடன் வாக்குவாதம்

உளுந்தூர்பேட்டை, ஜூன் 20: உளுந்தூர்பேட்டை வளாகத்தில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் மற்றும் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பல்வேறு வழிப்பறி வழக்கில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த நரேஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சேலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இவருடைய தாய் புஷ்பா மற்றும் மனைவி வீணா ஆகியோரையும் போலீசார் கைது செய்து நரேஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரையும் நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து சென்றனர். அப்போது திடீரென நரேஷ்குமார் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கில் எனக்கு மட்டுமே தொடர்புள்ளது. அப்படி இருக்கும்போது எனது தாய் மற்றும் மனைவியை ஏன் கைது செய்தீர்கள் என கேட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக தொடர்ந்து அவர் கூச்சல் போட்டதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே போலீசார் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் மூன்று பேரையும் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement

Related News