தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய ராணுவ வீரர் கண்ணமங்கலத்தில் பணி நிறைவு வரவேற்பு விழா

கண்ணமங்கலம், ஜூலை 3: கண்ணமங்கலத்தில் நடந்த பணி நிறைவு வரவேற்பு விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு ராணுவவீரர் பரிசுகள் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பிள்ளையார் கோயில் வளாகத்தில் ராணுவத்தில் பணிபுரிந்து பணி நிறைவு பெற்ற ராணுவ வீரர் பாலகிருஷ்ணனுக்கு வரவேற்பு விழா நடந்தது. பேரூராட்சி கவுன்சிலர் பரத் தலைமை தாங்கினார். முன்னாள் ராணுவ அதிகாரிகள் கார்த்திகேயன், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். அறங்காவலர் குழு தலைவர் பாண்டியன் வரவேற்றார்.

தொடர்ந்து, ராணுவத்தில் 35 வருடங்கள் பணிபுரிந்து பணி நிறைவு பெற்று வீடு திரும்பிய ராணுவ வீரர் பாலகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய ராணுவ வீரர், உங்களின் அன்பான வரவேற்பு என்னை நெகிழ்சியடைய செய்கிறது. என் தாத்தா, என் அப்பா, நான் என மூன்று தலைமுறைகளாக ராணுவத்தில் பணிபுரிகிறோம். இந்திய ராணுவம் தான் எங்கள் குடும்பம். நாட்டுக்காக நாங்கள் சேவை செய்கிறோம். அதேபோல் இங்கு துய்மை பணியாளர்கள் நமக்காக சேவை செய்கிறார்கள். அவர்களை கவுரவிக்கும் வகையில், கண்ணமங்கலம் பேரூராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன் எனக்கூறி அனைவருக்கும் பரிசுகள் வழங்கினார். அவருக்கு தூய்மை பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர். பின்னர், கிராம மக்கள் அவருக்கு மலர் தூவி ஊர்வலமாக வீட்டிற்கு அழைத்து சென்று மரியாதை செய்தனர்.