தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொறியாளர்களுக்கு தனி கவுன்சில் அமைக்க வேண்டும்

அரியலூர், அக்.31: பொறியாளர்களுக்கென தனி கவுன்சில் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, அரியலூர் மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பாவிடம், அரியலூர் மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் தலைவர் அறிவானந்தம், செயலர் நாகமுத்து, பொருளாளர் கார்த்திக், சாசன தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

Advertisement

தமிழ்நாட்டில் வழக்குரைஞர் மற்றும் மருத்துவர்களுக்கு உள்ளது போல, பொறியாளர்களுக்கும் தனி கவுன்சில் அமைத்து தர வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கிராம ஊராட்சி இவற்றில் தனித்தனியாக உள்ள பொறியாளர் பதிவு முறையை நீக்கி மாநிலம் முழுவதும் ஒரே பதிவு முறையை கொண்டு வர வேண்டும்.

சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது பொறியாளர்களுக்கு ஓடிபி வசதி வர செய்து தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தலைவர்கள் அழகு தாசன், செந்தில்குமார். அன்பழகன், இணை பொருளாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Advertisement

Related News