தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடையார்பாளையம் அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

ஜெயங்கொண்டம், ஆக.22: உடையார்பாளையம் அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் ஆல் த சில்ரன் சார்பில் ட்ரஸ்ட் சார்பில், பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர் முல்லைக்கொடி தலைமை வகித்தார். கணினி ஆசிரியர் மஞ்சுளா வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேப்பெருமாள் முன்னிலை வகித்தார்.

Advertisement

சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட தொண்டு நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசு கலந்து கொண்டு, பெண் கல்வியின் முக்கியத்துவம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை அரசு வழங்கும் நலத்திட்டங்கள் உதவித்தொகைகள், தமிழக அரசு பெண்களுக்காக வழங்கும் நல திட்டங்கள், பெண் கல்வி உதவித்தொகை, பெறுவது பற்றியும், மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழாசிரியர் ராமலிங்கம், பாவை சங்கர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் தமிழரசி நன்றி கூறினார்.

 

Advertisement