தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்துள்ள மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்களை உருவாக்க வேண்டும்

அரியலூர், ஆக.21: பொறியியல் படிப்பினை தேர்ந்தெடுத்துள்ள மாணவர்கள், சிந்தனைத் திறன்களை வளர்த்துக் கொண்டு, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்றார் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி. அரியலூர் அடுத்த விளாங்குடி அருகே காத்தன்குடிகிராமத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நேற்று முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்த்ரி பேசுகையில்,மாணவ, மாணவியர் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் கற்றாலும் பொறியியலில் சிறந்து விளங்குவதற்கு அது ஒரு தடை இல்லை.

Advertisement

பொறியியல் பாடப் பிரிவுகளை தேர்ந்தெடுத்துள்ள மாணவர்கள் புதுமையான சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு, அதன் மூலம் புது தொழில் நுட்பங்களையும், புது கண்டுபிடிப்புகளையும் உருவாக்க வேண்டும் .அதுவே தற்போதைய தொழில்நுட்ப உலகில், சிறந்த வேலைவாய்ப்பினை பெற்றுத் தரும். எனவே தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தினை அனைத்து மாணவர்களும் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு கொண்டு பயன்பெற வேண்டும் என்றார்.

மேலும், அக்கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்து பேசுகையில், முதலாமாண்டில் சேர்ந்த மாணவ, மாணவிகள் அடுத்த நான்காண்டுகள், விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் உழைத்தால் சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெறமுடியும் என்றார். முன்னதாக துறை தலைவர் மார்கபந்து வரவேற்றார். அனைத்து துறைகளின் கல்விசார் ஒருங்கிணைப்பாளர் ராஜாகுமார் நன்றி கூறினார்.

 

Advertisement

Related News