தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமானூர் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த பயிற்சி: விவசாயிகள் பங்கேற்பு

ஜெயங்கொண்டம், செப்.19: திருமானூர் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து ேமலாண்மை குறித்த பயிற்சியில் விவசாயிகள் பங்கேற்றனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரத்தில் காரைப்பாக்கம் மற்றும் அன்னிமங்கலம் கிராமங்களில் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

Advertisement

கிரிடு வேளாண் அறிவியல் மையர் தொழில்நுட்ப வல்லுனர் திருமலை வாசன் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மண்வளத்தை மேம்படுத்த மண் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் செயற்கை உரங்களை குறைந்த அளவில் பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் ரசாயன உரங்களில் உள்ள உப்புக்கள் படிதல் அளவினை குறைக்க இயலும் என்பதையும், மண் இறுக்கமடைதலையும் தவிர்க்க இயலும் என கூறினார்.

மண் வளத்தை மேம்படுத்த உதவும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை பெருக்க தொழு உரம் இடுதல், பசுந்தாள் உர பயிர்களை பயிரிடுதல் மற்றும் திரவ உயிர் உரங்களை பயன்படுத்துதலின் அவசியம் குறித்து கூறினார், மேலும் விவசாயிகள் அதிக அளவில் யூரியா மற்றும் டிஏபி உரங்களை அடி உரமாக இடுவதை காட்டிலும் நானோ உரங்களாக இலை வழி தெளிப்பு செய்வதன் மூலம் உர பயன்பாட்டு திறன் அதிகரிக்கும் என விளக்கினார்.

நெல் வயல்களில் பொதுவாக தோன்றும் பாசிகளை ஏக்கருக்கு 250மி.லி பாஸ்பரஸ் கரைக்கும் பாக்டீரியாவை எருவில் கலந்து 15 நாள் இடைவெளியில் வயலில் இட்டு கட்டுப்படுத்தலாம் என்று கூறினார். மேலும் ஏக்கருக்கு 5 கிலோ விதம் நுண்சத்து உரங்களை இடுவதன் மூலம் நுண்சத்து பற்றாக்குறையால் ஏற்படும் மகசூல் குறைப்பை தவிர்க்கலாம் எனவும் கூறினார். இப்பயிற்சியில் உதவி வேளாண்மை அலுவலர் பழனிவேல் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் கலைமதி மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement