தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களைத்தேடி மருத்துவம் ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார்

 

Advertisement

பெரம்பலூர்,நவ.18: தொற்றாநோய் களப் பணிகளை மட்டும் செய்திட உதவிடவேண்டும் என பெரம்பலூர் மாவட்ட மக்களைத் தேடி மருத்துவம் ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் குறை தீர்க்கும் நாள் கூட்டஅரங்கில் நேற்று திங்கட் கிழமை காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட மக்களைத் தேடி மருத்துவம் ஊழியர்கள் அதன் நிதி பொறுப்பாளர் செல்வி தலைமையில் 25 பேர் திரண்டு வந்து அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது; பெரம்பலூர் மாவட்டத்தில் தொற்றாநோய் களப் பணியில் பெண் சுகாதார பணியாளர்களாக 95 களப்பணியாளர்கள் பணி புரிந்து வருகிறோம்.

எங்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ5,500 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இரண்டுமணி நேர பணிதான் என்று கூறி எங்களை பணியில் சேர்த்து விட்டு இப்போது முழுநேரப் பணியாளர்களைப் போல் வேலைவாங்கி வருகின்றனர். இதில், உயர் அதிகாரிகளின் மிரட்டலுக்கும் நாங்கள் ஆளாகி வருகிறோம். எனவே, எங்களுக்கு வழங்கிய தொற்றா நோய் பணிகளை மட்டும் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் செவ்வனே செய்திட உதவிட வேண்டும் என அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News