தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தையல் தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கவேண்டும்

அரியலூர், செப். 17: அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தையல் தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், இலவச தையல் இயந்திரம், தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்க வேண்டும். தமிழ்நாடு தையல் தொழிலாளர் நல வாரியத்துக்கு தனி நிதியம் ஏற்படுத்த வேண்டும். தையல் தொழிலாளர்களுக்கு மாநில அளவில் முத்தரப்புக்குழு அமைக்கவேண்டும்.

Advertisement

கட்டுமான நல வாரிய தொழிலாளர்களுக்கு வழங்கும் கல்வி, வீடு கட்ட நிதி உதவி உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் தையல் நலவாரிய தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரம் உயர்த்தி வழங்கவேண்டும். தையல் கடை, கூட்டுறவு தையல் தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கவேண்டும்.

கூட்டுறவு தையல் அனைத்து உறுப்பினர்களுக்கும் துணி வழங்கி, கூலி உயர்வு, அடையாள அட்டை, லக்கேஜ் கட்டணம், தீபாவளி போனஸ், பி.எப். இஎஸ்ஐ போன்ற திட்டங்களையும் அமல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சரண்யா தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட தலைவர்கள் துரைசாமி, சகுந்தலா, துணைத் தலைவர்கள் சிற்றம்பலம், சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தையல் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

 

Advertisement

Related News