தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்வழி கல்வியை கட்டாயமாக்க வலியுறுத்தி உண்ணாவிரதம்

அரியலூர், செப். 17: அரியலூர் அண்ணாசிலை அருகே அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாயப்பாட மொழியாக்க வலியுறுத்தி தமிழ் வழிக் கல்வி இயக்கத்தினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் வழியில் கற்றவர்களுக்கே தமிழ்நாட்டில் வேலை வழங்க வேண்டும். மழலையர் கல்வியில், அங்கன்வாடிக் கூடங்களில் தாய்மொழி தமிழில் மட்டுமே கற்பித்தல்முறையை கட்டாயமாக்க வேண்டும்.

Advertisement

இதேபோல் அனைத்து தொடக்க நிலைப் பள்ளிகளிலும் 5ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும். அரசுப்பள்ளி தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலை வாய்ப்புகளில் 60 சதவீதம் இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. தொல்லாய்வுப் பேரறிஞர் விக்டர் தலைமை வகித்தார். தமிழ்பண்பாட்டு பேரமைப்பு தலைவர் சீனி. பாலகிருஷ்ணன், ஆசிரியர் நல்லப்பன், கவிஞர் அறிவுமழை, ஈகவரசன், அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர்.

தமிழ் வழிக்கல்வி இயக்கத் தலைவர் சின்னப்பத்தமிழர், பொதுச்செயலர் தேனரசன், பொருளாளர் மணிசேகரன், செந்தமிழர் எழுச்சி நடுவம் நிர்வாகி செந்தமிழ்வேந்த் தொடக்கவுரையாற்றினார். அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்தியச் செயலர் அண்ணாமலை, தமிழர் நீதிக் கட்சித் தலைவர் சுபா.இளவரசன் சிறப்புரையாற்றினர். நிறைவில் தமிழ்களம் இளவரசன் நன்றி கூறினார்.

 

Advertisement

Related News