தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழக அரசு சார்பில் கீழப்பழுவூரில் ரூ.3 கோடி மதிப்பில் சின்னசாமி அரங்கம்

அரியலூர், நவ. 7: அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே, அரியலூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையினையொட்டி ரூ.3 கோடி மதிப்பில் மொழிப்போர் தியாகி சின்னசாமி பெயரில் தமிழக அரசு மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரங்கம் கட்டப்பட்டு வருகிறது.

Advertisement

இங்கு 300 நபர்கள் அமரும் வகையில் அரங்கம், 100 நபர்கள் உணவருந்தும் வகையில் கூடம் மற்றும் சமையல் கூடம் ஆகியவை கொண்டுள்ளது. மேலும், மணமகன், மணமகள் அறைகள், கழிவறைகள், காற்றோட்டத்துக்கு பெரிய அளவிலான ஜன்னல்கள், குடிநீர் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரங்கம் முன்பும், பக்க வாட்டிலும் வாகனங்கள் நிறுத்த தாராளமாக காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அரங்கைசுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுபமுகூர்த்த நிகழ்வுகள், சிறு, சிறு கட்சி கூட்டங்கள், அமைப்புகள் ஆலோசனை கூட்டங்கள் நடத்த குறைந்த வாடகைக்கு இந்த அரங்கம் விடப்படவுள்ளது. தற்போது அரங்கத்தில் 90 சதவீத வேலைகள் நிறைவடைந்துள்ளன. அரங்கம் முன்பு தரைதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.விரைவில் இந்த அரங்கம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. திறப்புக்கு பிறகு முன்பதிவு செய்ய பொதுமக்கள் 9498042421 என்ற எண்ணை அணுகலாம் என அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News