தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியலூர் மாவட்டத்தில் 8 தனியார் உரக்கடைகளில் விற்பனை செய்ய தடை

ஜெயங்கொண்டம், நவ.5:அரியலூர் மாவட்டத்தில் வேளாண் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்த போது குறைபாடுகள் கண்டறியப்பட்ட 8 தனியார் உரக்கடைகளுக்க விற்பனை தடை விதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் வேளாண்மை இணை இயக்குனர் பாபு அறிவிப்பின் படி வேளாண்மை உதவி இயக்குனர் தரகட்டுப்பாடு ராதாகிருஷ்ணன் ஆலோசனையின் படி அரியலூர் மாவட்டத்தில் தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தர்மபுரி மாவட்ட உர கண்காணிப்பு குழு இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

தர்மபுரி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு சங்கரி தலைமையில் நடைபெற்றது. இன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், செந்துறை ஜெயங்கொண்டம், தா. பழூர், ஆண்டிமடம், திருமானூர் ஆகிய வட்டாரத்தில் உள்ள தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உர கண்காணிப்பு குழு திடீர் ஆய்வு மேற்கொண்டு உரம் இருப்பு விவரம், உர உரிமம், உரம் இருப்பு பதிவேடு, விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை செய்வது குறுத்து ஆய்வு செய்தனர்.

உரங்கள் தினசரி பலகையில் பதிவேற்றம் செய்தல் உர குடோன்களில் உரங்கள் இருப்பு விவரம் மற்றும் மூட்டைகள் சரியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதா போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது குறைபாடுகள் கண்டறியப்பட்ட 8 உரக்கடைகளுக்கு விற்பனை தடை ஆணை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

Advertisement