தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விக்ரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வரும் 25ம் தேதி ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: அமைப்புசாரா தொழிலாளர்கள் கலந்து கொள்ளலாம்

அரியலூர், அக். 23: விக்ரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வரும் 25ம் தேதியன்று நடக்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத அமைப்புச்சார தொழிலாளர்கள் பங்கேற்று யன்பெறலாம் என கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்தார்.

Advertisement

இதுகுறித்து, அவரது செய்திக்குறிப்பு:

தொழிலாளர் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் இதர 19 அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூகப்பாதுகாப்பு மற்றும் நலவாரியம், தமிழ்நாடு அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியம் உள்ளிட்ட 20 நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் பதிவு பெற்ற அமைப்புச் சாராத் தொழிலாளர்களுக்கு நோய்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் பதிவு பெறாத தொழிலாளர்களுக்கு நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் நோய்களை கண்டறிந்து அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, அரியலூர் மாவட்டம், தா.பழூர் வட்டாரம், விக்ரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அக்டோபர் 25 அன்று நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. எனவே, இம்முகாமில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத அமைப்புச்சார தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் முகாமிற்கு வரும் போது கீழ்க்கண்ட ஆவணங்கள் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மருத்துவ முகாமிற்கு வரும் பதிவு பெற்ற அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண் ,ஆதார் அடையாள அட்டை, பதிவு நலவாரிய அடையாள அட்டை, இதற்கு முன்பு சிகிச்சை பெற்ற விவரங்கள் மருத்துவ முகாமிற்கு வரும் பதிவு பெறாத அமைப்புச்சாராத் தொழிலாளர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கபட்ட கைப்பேசி எண், ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயதிற்கான ஆவணம், பணிச் சான்று, வங்கி கணக்கு புத்தக நகல், புகைப்படம் (பாஸ்போர்ட் சைஸ்)-1 ஆகியவற்றுடன் வந்து அமைப்புச்சாரா மற்றும் கட்டுமானத்தொழிலாளர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News