தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான இளைஞர் திருவிழா

அரியலூர், டிச. 11: அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் மாவட்ட அளவிலான இளைஞர் திருவிழா நேற்று நடைபெற்றது.

Advertisement

இதில் அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சித்ரா குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து பேசியதாவது,

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் மட்டுமல்லாமல் அந்நாட்டின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டும் கூட அவசியம். எனவே நமது கலை மற்றும் பாரம்பரிய பண்பாடுகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சமூகத்தின் தேவையாக உள்ளது. அந்த வகையில், மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் கண்டு அதன் மூலம் கலை, கலாச்சாரங்களை பாதுகாக்க முன் வரவேண்டும் என்றார். ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொ) ராசமூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் கல்வியுடன் நமது கலாச்சாரங்களையம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ந்து, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கவிதை, கட்டுரை, கதை எழுதுதல், நாட்டுப் புற நடனம், பாடல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமஜெயம், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் கருணாகரன், பன்னீர்செல்வம், மேரி வைலட் கிறிஸ்டி ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement

Related News