தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தமிழக - கேரள எல்லை பகுதியில் சாராயம் காய்ச்சும் கும்பல் நடமாட்டம் உள்ளதா?

 

மேட்டுப்பாளையம், ஜூலை 14: அத்திக்கடவு வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டதில் பழங்குடியின இளைஞர் பரிதாபமாக பலியானார். தொடர்ந்து வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து கோவை எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அதியமான் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நேற்று தமிழக - கேரள எல்லை பகுதியில் உள்ள முள்ளி வனப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வனப்பகுதிகளில் வன வேட்டை கும்பல் நடமாட்டம் உள்ளதா? மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா?என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரின் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் கூறுகையில் ‘‘கோவை எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அதியமான் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் தலைமையில் இரண்டு எஸ்ஐக்கள், 12 போலீசார் அடங்கிய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் தமிழக - கேரள எல்லை பகுதியில் உள்ள முள்ளி வனப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பழங்குடியின கிராமங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது பழங்குடியின கிராம மக்களிடம் வனப்பகுதியில் புதிய நபர்கள் நடமாட்டம் உள்ளதா? நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருக்க கூடாது. அப்படி வைத்திருந்தால் அதனை தாங்களாகவே போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. சோதனையின் போது எதுவும் கைப்பற்றப்படவில்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும்’’ என தெரிவித்தார்.

Related News