தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடிநீர் இணைப்பு கோரி விண்ணப்பங்கள் குவிந்தன

 

Advertisement

கோவை, ஜன. 12: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் உள்ள பொறியியல் பிரிவு அலுவலகத்தில் புதிய குடிநீர் இணைப்பு விண்ணப்பங்களை, ஜனவரி 11ம்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம் என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவித்தார். அதன்படி, மாநகராட்சிக்கு கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, சென்ட்ரல் என ஐந்து மண்டல அலுவலகங்களில் உள்ள பொறியியல் பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, நேற்று மக்கள் குவிந்தனர்.

புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கு தேவையான வீட்டின் பத்திர நகல், சொத்து வரி செலுத்திய ரசீது நகல் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு புகைப்பட நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கினர். ஒவ்வொரு மண்டலத்திலும் சராசரியாக சுமார் 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன. இவற்றை சரிபார்த்து, உரிய டெபாசிட் தொகை பெறப்பட்டு, விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி துவங்கும் என மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறினர்.

Advertisement