தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கிருஷ்ணராயபுரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கான விண்ணப்பங்கள் வீடு வீடாக விநிநேயம்

 

கிருஷ்ணராயபுரம், ஜூலை 10:கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கான விண்ணப்பங்களை வீடு வீடாக சென்று பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் (பொறுப்பு) வழங்கினார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கான படிவங்கள் மற்றும் நோட்டீஸ்களை பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் (பொறுப்பு) தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் செல்வராணி, சண்முகம் மற்றும் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு வழங்கினர்.

கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் ஜூலை 8ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 13ம் தேதி வரை பேரூராட்சி பணியாளர்கள் வீடு வீடாக விண்ணப்பங்கள் கொடுக்கின்றனர். இவ்வாறு விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்ட பிறகு 13 துறைகள் மூலம் 43 சேவைகளுக்கான விண்ணப்பங்கள் பெற பெற்று அதற்கான தீர்வு உடனடியாக எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இதில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி உங்களுடன் ஸ்டாலின் முகாம் வருகின்ற ஜூலை 16 ம் தேதி கிருஷ்ணராயபுரம் கீழ அக்ரஹாரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. ஆகையால் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை முகாமில் கொடுத்து பயன் பெறுமாறு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது.

Related News