தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு ஆதிராவிடர் நல பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கரூர், ஜூன் 23: அரசு ஆதிராவிடர் நல மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் அரசு ஆதிராவிடர் நல மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் புன்னம் அரசு ஆதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் (வணிகவியல்) மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி கோட்டமேடு(ஆங்கிலம்), மாவத்தூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி (அறிவியல்), நெய்தலூர் (ஆங்கிலம்), நந்தக்கோட்டை (ஆங்கிலம்,சமூக அறிவியல்), சணப்பிரட்டி(ஆங்கிலம் சமூக அறிவியல்), அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி திருக்காம்புலியூர்(சமூக அறிவியல்) பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் நியமனம் செய்ய தகுதி பெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்காணும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் (வணிகவியல்) காலிப்பணிடத்திற்கு M.Com., B.Ed., கல்விதகுதி பெற்ற நபர்கள் உரிய கல்வித்தகுதி சான்றுகளுடனும், பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடத்திற்கு B.A.,B.Ed.மற்றும் B.Sc., B.Ed கல்விதகுதி பெற்ற நபர்கள் உரிய கல்வித்தகுதி சான்றுகளுடனும், எழுத்து மூலமான விண்ணப்பங்களுடன் நேரடியாகவோ/ அஞ்சல் மூலமாகவோ 24.6.2025 முதல் 26.6.2025 முடிய மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், முதல் தளம், அறை எண்.114, கரூர் - 639007 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Advertisement