தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செஞ்சிலுவை சங்கத்தில் பணியாற்ற மருத்துவர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

 

Advertisement

ஊட்டி.நவ.23: நீலகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்க செயலாளர் மோரீஸ் சாந்தா குரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய செஞ்சுலுவை சங்க மாநில தலைமை, நீலகிரி மாவட்ட ெசஞ்சிலுவை சங்கத்திற்கு நடமாடும் மருத்துவ வாகன சேவை வழங்கியுள்ளது.இச்சேவையில் பணியாற்ற மருத்துவர், செவிலியர், வாகன ஓட்டுநர் மற்றும் அலுவலக பணியாளர் பணிக்கு மூன்று ஆண்டுகள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர்.

மருத்துவர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்பிபிஎஸ்., எம்டி., பிடிஎம்எஸ்., படித்திருக்க வேண்டும். மாதம் ரூ.64 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். செவிலியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிஎஸ்சி., நர்சிங் பட்டம் பெற்றிருக்கு வேண்டும். செவிலியருக்கு மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். வாகன ஓட்டுநர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருத்தல் வேண்டும். மாதம் ரூ.20 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும்.

அலுவலக பணியாளர் கம்ப்யூட்டர் பட்டம் பெற்றிக்க வேண்டும்.மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 45 வயது வரை இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் csrnodnlg@ircstnb.org என்ற மின்னஞ்சல் முகவரியில் மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 27.11.2024. மேலும், விவரங்களுக்கு 94426 75508, 93601 01124 மற்றும் 79042 28459 என்ற செல்போன்றகளில் தொடர்பு கொண்டு அறிந்துக் கொள்ளலாம்.

Advertisement

Related News