தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

பொன்னை, ஜூலை 2: வள்ளிமலை அருகே செல்போன் திருடியதாக ஏற்பட்ட தகராறில் சாமியாரை அடித்துக்கொன்ற வழக்கில் நேற்று மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இங்கு மலை அடிவாரத்தில் உள்ள வள்ளிமலை கோட்டநத்தம் பகுதியில் விவசாய நிலத்தில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சாமியார் ரவி(65) அங்குள்ள குடிசையில் இரவு நேரங்களில் தங்கி வந்தார். இந்நிலையில் சாமியார் ரவி அப்பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன்(46) என்பவரின் செல்போனை திருடி விட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் ஹரி கிருஷ்ணன், மதன்குமார், லோகேஷ், பிரபு, திருமலை உள்ளிட்டோர் சாமியார் ரவியை அடித்து செல்போன் திருடி இருந்தால் கொடுத்துவிடும் படி கேட்டுள்ளனர்.

Advertisement

அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு சாமியார் ரவியை ஹரிகிருஷ்ணன் கீழே தள்ளியுள்ளனர். இதில், அவர் கீழே விழுந்ததில் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மேல்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த 14ம் தேதி ஹரி கிருஷ்ணன், மதன்குமார், லோகேஷ், பிரபு உள்ளிட்டோரை கைது செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த கோட்டநத்தத்தை சேர்ந்த திருமலை(31) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் திருவலம்- பொன்னை கூட்ரோட்டில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவ்வழியாக வந்த திருமலையை கைது செய்து காட்பாடி கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News