தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அண்ணா வழியில் திராவிட மாடல் ஆட்சி: திண்டுக்கல் லியோனி பேட்டி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்து சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு பாடநூல் கழக மண்டல அலுவலகத்தில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, அங்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட புத்தகங்கள் போக மீதமுள்ள புத்தகங்கள் நிலை, வருங்காலத்தில் தேவைப்படும் எண்ணிக்கை குறித்தும் வட்டார அலுவலரிடம் கேட்டறிந்தார்.பின்னர், திண்டுக்கல் ஐ.லியோனி நிருபர்களிடம் பேசுகையில்; `தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு இருக்கும் தைரியம் கூட எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை. ஓரணியில் தமிழ்நாடு என்ற நிகழ்ச்சிக்காக நான் பல்லாவரத்திற்கு சென்றபோது, தமிழக அரசின் செயல் திட்டங்களை பார்த்து அதிமுகவினரே திமுகவுக்கு வாக்களிக்கும் நிலை இன்னும் மூன்று மாதத்தில் உருவாகிவிடும்.அதிமுக பாஜ கூட்டணி பிரிந்தபோது, வெடி வெடித்து லட்டு கொடுத்து கொண்டாடிய அதிமுகவினர், தற்போது மீண்டும் இணைந்த நிலையில் அதை கொண்டாட கூட இல்லாத வெறுப்பு சூழ்நிலை உள்ளது.

மேலும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நர்சரி பள்ளிக்கூட முதல்வராக தகுதிக்கூட இல்லை. பக்கம் பக்கமாக பேப்பரை வைத்துக்கொண்டு பேசியும் வொர்க் ப்ரம் ஹோம் எனும் நிலையிலேயே கட்சியை நடத்திக்கொண்டு வருகிறார். மக்களிடம் செல், மக்களிடம் பழகு, மக்களிடம் கற்றுக்கொண்டு, அதற்கு ஏற்பபணி செய் என கற்றுக்கொடுத்த காஞ்சி பேரறிஞர் அண்ணாவின் வழியில் தற்போது திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது’’ என்றார்.நிகழ்வின்போது, காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், காஞ்சிபுரம் வட்டார தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related News