தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புழல் அண்ணா நினைவு நகரில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு

 

Advertisement

புழல், மே 28: மாதவரம் மண்டலம், 24வது வார்டு புழல் அண்ணா நினைவு நகரில் குழந்தைகள் அங்கன்வாடி மைய கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர் என புழல் அண்ணா நினைவு நகர் பகுதி மக்கள் வார்டு கவுன்சிலர் சேட்டுவை நேரில் சந்தித்து புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில் அவரது வார்டு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் கவுன்சிலர் சேட்டு தலைமை தாங்கி கட்டிடத்தை அங்கன்வாடி குழந்தைகள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில் 24வது வார்டு உதவி பொறியாளர் கமலக்கண்ணன், அங்கன்வாடி மைய அலுவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News