தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 20 குட்டிகளை ஈன்ற அனகோண்டா பாம்பு: காட்டு பூனை 3 குட்டிகளை ஈன்றது

பூந்தமல்லி, ஜூலை 24: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகள் உள்ளன. இதனை காண தினசரி ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அனகோண்டா பாம்புகள் 20 குட்டிகளையும், காட்டு பூனை 3 குட்டிகளையும் ஈன்றுள்ளது என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்ட ெசய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வன பாதுகாப்புக்கான முன்னணி மையமாக விளங்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா பாம்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், ஒரு அனகோண்டா பாம்பு, கடந்த 10ம் தேதி 9 குட்டிகளை ஈன்றது. மறுநாள் 11ம் தேதி மற்றொரு அனகோண்டா பாம்பு 11 குட்டிகளை ஈன்றது. மேலும் இந்தியாவில் மட்டும் காணப்படும் காட்டு பூனை 13ம் தேதி அன்று 3 குட்டிகளை ஈன்றது. இதனை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றை விரைவில் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Related News