தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அஞ்சுகிராமம் அருகே கடற்கரையில் அம்மன் சிலை மீட்பு: அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

அஞ்சுகிராமம், ஜூன் 18: அஞ்சுகிராமம் அருகே கடற்கரையில் தலை பகுதி உடைந்த நிலையில் கிடந்த அம்மன் சிலையை அதிகாரிகள் மீட்டு கன்னியாகுமரியில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அஞ்சுகிராமத்தை அடுத்த ஆமணக்கன்விளை கடற்கரையில் சுமார் 2.5 அடி உயரம் உள்ள அம்மன் சிலை ஒன்று கிடந்தது. அந்த சிலையின் நெற்றியின் மேல் பகுதி உடைந்த நிலையில் காணப்பட்டது. இதை பார்த்ததும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அஞ்சுகிராமம் காவல்நிலையம், லீபுரம் கிராம நிர்வாக அலுவலர், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.

Advertisement

அதைத்தொடர்ந்து போலீசார், லீபுரம் கிராம நிர்வாக அலுவலர் சாஸ்தா, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து லீபுரம் கிராம நிர்வாக அலுவலர் சாஸ்தா அம்மன் சிலையை கைப்பற்றி கன்னியாகுமரியில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். ஏதாவது கோயில்களில் பழைய சிலைகளை மாற்றி விட்டு புதிய சிலைகள் வைக்கும் போது, பழைய சிலைகளை கடற்கரைகளில் கொண்டு போட்டு விட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement