தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில்களில் அமாவாசை வழிபாடு

 

Advertisement

ராமநாதபுரம், ஜூன் 7: ராமநாதபுரம் மாவட்ட அம்மன் கோயில்களில் வைகாசி மாத அமாவாசையை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. உத்தரகோசமங்கை வராஹி அம்மனுக்கு மஞ்சள், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகை அபிஷேகம் செய்யப்பட்டு, மஞ்சள் காப்பு சாற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று வரை நூற்றுக்கணக்கான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

கடலாடி அருகே வனப்பேச்சியம்மன், ராக்காச்சி அம்மனுக்கு பால், மஞ்சள், விபூதி, தீர்த்தங்கள், குங்குமம் உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதுபோன்று ராமநாதபுரம் அரண்மனையிலுள்ள ராஜராஜேஸ்வரி அம்மன், பெரியமாரியம்மன், வனசங்கரி அம்மன், ரயில்நிலைய பாலம் அருகே உள்ள வெட்காளியம்மன், கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன், பாதாள காளியம்மன், ஆப்பனூர் அரியநாயகி அம்மன், பூங்குளம் சேதுமாகாளியம்மன், காணீக்கூர் பாதாள காளியம்மன் ஆகிய கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

அம்மனுக்கு இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல வகை அபிஷேகங்களும், சிறப்பு தீபாராதனைகளும் நடந்தது. மேலும் அமாவாசையையொட்டி திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில், மாரியூர் பூவேந்தியநாதர் கோயில்களில் முன்னோர்களுக்கு பக்தர்கள் மோட்ச தீபம் ஏற்றி வழிப்பட்டனர்.

Advertisement

Related News