தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தா.பழூரில் ஒன்றிய அரசை கண்டித்து அனைத்திந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

 

தா.பழூர், ஜூலை. 10; அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் அனைத்திந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் அரியலூர் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய பொது வேலை நிறுத்தம் வெற்றி பெற வேண்டி 12 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும்.

விவசாய விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மின்சாரத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் முறையை கைவிட வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது ஒப்பந்த தினக்கூலி வெளிச்சந்தை முறை பணியாளர் போன்ற பெயர்களில் அடக்கம் சுரண்டலுக்கு முடிவு கட்ட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில அமைப்பாளர் கோவிந்தன், மாநில குழு உறுப்பினர் சுந்தர விநாயகம், மாநில செயலாளர் குணாளன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்ச்சியின் நிறைவாக வேல்ராஜ் நன்றி கூறினார்.

Related News