தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆல்கொண்டமால் கோவில் திருவிழா; உருவார பொம்மைகள் செலுத்தி வழிபாடு

உடுமலை, ஜன.17: உடுமலை அருகே உள்ள ஆல்கொண்டமால் கோவில் திருவிழா நடந்தது.

Advertisement

உடுமலை அருகே பெதப்பம்பட்டி உள்ள சோமவாரப்பட்டியில் பிரசித்தி பெற்ற மலாக்கோவில் என்று அழைக்கப்படும் ஆல்கொண்டமால் கோயில் அமைந்துள்ளது. திருப்பூர், கோவை மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதியில் உள்ள குக்கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டாலோ அல்லது விபத்துகளில் ஊனமடைந்தால் நோய் நிவர்த்தி ஆவதற்காக மாலக்கோயிலில் வேண்டிக் கொள்வர். கால் கால்நடைகள் நோயிலிருந்து மீண்டழுந்தபோது பொங்கல் திருநாளின்போது 3 நாட்கள் நடைபெறும் திருவிழாக்களில் நேர்த்திக்கடனாக கன்றுக்குட்டி, உருவார பொம்மைகளை மாலை கோயிலுக்கு காணிக்கையாக வழங்குவது பக்தர்களின் வழக்கம்.

நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 6மணிக்கு உழவர் திருநாள் சிறப்பு பூஜை நடந்தது. இதில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் இருந்து ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் திரண்டு வந்து சாமிதரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து தங்கள் நேர்த்திக்கடனாக கன்று குட்டி, உருவார பொம்மைகளை காணிக்கையாக செலுத்தினர்.இன்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது. பகல் 11 மணி அளவில் சாமிக்கு விசேஷ அலங்காரம் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனையும் மாலை 6 மணிக்கு மகாபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் இரவு 7 மணிக்கு மகா தீபாராதனை இரவு 9 மணிக்கு சுவாமி திருவிதி உலா மகா தீபாராதனை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் அமரநாதன், கோவில் செயல் அலுவலர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

திருவிழாக்கான ஏற்பாடுகளை குடிமங்கலம் ஒன்றியம் கல்லாபுரம், சோமவாரப்பட்டி ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளை மேற்கொண்டு வந்தனர். பொள்ளாச்சி, உடுமலை ,திருப்பூர் பல்லடம் ஆனைமலை மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாலக்கோவிலுக்கு நேற்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

Advertisement

Related News