தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாபாவில் மது விருந்து: அதிமுக பிரமுகர் கைது

 

Advertisement

சென்னை, ஜூலை 22: தாபாக்களில் சட்ட விரோத மது விருந்து அளித்த அதிமுக பிரமுகர் உள்ளிட்ட இரண்டு பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பைபாஸ், கவரப்பேட்டை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாபா ஓட்டல்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் மதுவிருந்து நடைபெறுவதாக சிப்காட் போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து இரவோடு இரவாக நேற்று முன்தினம் அனைத்து தாபாக்களிலும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள செவன் ஸ்டார் தாபாவில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட மறைவிடத்தில் மது விருந்து நடைபெற்றது. சட்டவிரோதமாக மது விருந்து அளித்த செவன் ஸ்டார் தாபா உரிமையாளரும், அதிமுக பிரமுகருமான ஏழுமலை (41) என்பவரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அதேபோல் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள ஹைவே தாபாவிலும் போலீசார் சோதனை செய்தபோது மது விருந்து நடைபெற்றது உறுதியானது. இதனால் தாபாவின் உரிமையாளர் நசீர்(58) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement