தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பிய ஏர் ஹாரன் பறிமுதல்

கோவில்பட்டி, ஜூன் 7: கோவில்பட்டியில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பிய காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவில்பட்டியில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ள பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து துறை அலுவலர் கிரிஜாவிடம் புகார்கள் சென்றன. இதையடுத்து அவரது தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பெலிக்ஸன் மாசிலாமணி, சுரேஷ் விஸ்வநாத், போக்குவரத்து காவல் உதவியாளர் செல்வகுமார் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கொண்ட குழுவினர் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நின்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மினி பேருந்துகளில் திடீர் சோதனை நடத்தினர். 25 பேருந்துகளில் நடத்திய சோதனையில் 10 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், 15 பேருந்து ஓட்டுநர்களுக்கு அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பொருத்தக்கூடாது என அறிவுரை வழங்கினர். காற்று ஒலிப்பான்களை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தாங்களாகவே முன் வந்து அகற்ற வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.