தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பூரில் உண்ணாவிரத போராட்டத்திற்கு சரக்கு வாகனத்தில் தொண்டர்களை அழைத்து வந்த அதிமுகவினர்

 

Advertisement

திருப்பூர், டிச. 4: திருப்பூரில் நேற்று நடந்த அ.தி.மு.க. போராட்டத்திற்கு தொண்டர்களை பாதுகாப்பற்ற முறையில் சரக்கு வாகனத்தில் அ.தி.மு.க.வினர் அழைத்து வந்தனர். மேலும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தினர். திருப்பூரில் சொத்து வரி உள்ளிட்ட வரி உயர்வை குறைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில், எம்.எல்.ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், மகேந்திரன், கே.என். விஜயகுமார் மற்றும் எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்திற்கு கூட்டத்தை காண்பிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர். இதில், பல தொண்டர்களை சரக்கு வாகனங்களில் பாதுகாப்பற்ற முறையிலும், விதிகளை மீறியும் அ.தி.மு.க.வினர் அழைத்து வந்தனர். இதுபோல் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதித்த இடத்தையும் மீறி சாலையில் அ.தி.மு.க.வினர் பலர் நின்று கொண்டிருந்தனர்.

Advertisement