தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இழப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி வேளாண் அலுவலகம் முற்றுகை

திருச்சுழி, மே 29: நரிக்குடி பகுதியில் உள்ள விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்திருந்தனர். இப்பயிருக்கு காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.450 பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் போதிய மழை இன்றி சரிவர விவசாயம் நடைபெறவில்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகள் பாதிப்படைந்தனர்.பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என ஒரு ஆண்டுக்கு மேலாக வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து வேளாண் துறை, புள்ளியியல் துறை, வருவாய் துறை, பாரத ஸ்டேட் வங்கி புள்ளி விவரக் கணக்கு எடுத்தது. ஒன்றிய அரசு தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் இழப்பீட்டுத் தொகையாக ரூ.400 மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைத்ததாக கூறப்படுகிறது.

Advertisement

காப்பீட்டுக்காக செலுத்திய தொகையை விட குறைவாக வழங்கியதால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள், ஒன்றிய அரசை கண்டித்தும், முழுமையான இழப்பீட்டு தொகை வழங்கக்கோரியும் நேற்று நரிக்கடி வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் பாசன விவசாய சங்க மாவட்ட தலைவர் ராம்பாண்டியன், செயலாளர் கோபால கிருஷ்ணன் முன்னிலையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய முறையில் இழப்பீட்டுத் தொகை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒன்றிய அரசு காப்பீட்டு தொகையை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் வழங்காமல் மாநில அரசு மூலம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement

Related News