தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

புதுப்பட்டினம், மைக்கேல்பட்டியில் உழவரை தேடி வேளாண்மை முகாம்

 

தஞ்சாவூர், ஜூலை 1: : தஞ்சாவூர் வட்டாரத்தில் உள்ள புதுப்பட்டினம் கிராமம் மற்றும் பூதலூர் வட்டாரத்தில் உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தில் தோட்டக்கலைத்துறையின் முன்னிலையில் உழவரை தேடி வேளாண்மை முகாம் நடைபெற்றது.

இதில் புதுப்பட்டினம் கிராமத்தில் தஞ்சாவூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் முத்தமிழ்ச்செல்வி மற்றும் மைக்கேல்பட்டி கிராமத்தில் பூதலூர் தோட்டக்கலை அலுவலர் நித்திஸ் ஆகியோர் தோட்டக்கலைத்துறை சார்பாக பங்கு பெற்று தோட்டக்கலைத்துறையின் 202526ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட அரசின் புதிய திட்டங்கள் பற்றி எடுத்து கூறினர்.

மேலும் வயல் ஆய்வு மேற்கொண்டு பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாப்பது பற்றியும் அதற்கான பரிந்துரைகள் எடுத்து கூறப்பட்டது. நுண்ணீர் பாசன திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விவசாயிகளிடம் எடுத்து ரைக்கப்பட்டது. இம்முகாமில் வேளாண்மை துறை, வேளாண் வணிக துறை, கால்நடைத்துறை, மீன்வளத்துறை, சர்க்கரை துறை மற்றும் இதர துறை அலுவலர்கள் பங்கு பெற்று அவர்களின் துறையின் நலத்திட்டங்களை விவசாயி களிடம் எடுத்து கூறினார்கள். மேலும் விவசாயிகளின் குறைகளை கேட்டு மனுக்கள் பெற்றுக்கொண்டு TNAgrisnet என்ற இணையத்தளதில் தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.