தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாய்லாந்திலிருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ஆப்பிரிக்க கருங்குரங்கு, ஆமைகள் பறிமுதல்

மீனம்பாக்கம், ஜூன் 20: தாய்லாந்து நட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, நேற்று அதிகாலை தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் நிறுத்தி, சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த சுமார் 40 வயது ஆண் பயணி ஒருவர், சுற்றுலாப் பயணியாக தாய்லாந்து நாட்டிற்கு போய்விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்திருந்தார். சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகத்தில், அவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அவருடைய உடைமைகளுக்குள் இரண்டு பெரிய கூடைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அவைகளை எடுத்து திறந்து பார்த்தபோது, ஒரு கூடையில் அரிய வகை ஆப்பிரிக்க நாட்டு கருங்குரங்குகள் 2 இருந்தன. மற்றொரு கூடையில் ஆப்பிரிக்க நாட்டு அரிய வகை ஆமைகள் 7 இருந்தன.

Advertisement

இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை வெளியில் விடாமல் நிறுத்தி வைத்து, விசாரித்தனர். அப்போது அந்தப் பயணி விசாரணைக்கு சரிவர பதில் அளிக்காமல் மழுப்பலாக பதில் கூறினார். இதையடுத்து அந்த கருங்குரங்குகளையும், அறிய வகை ஆமைகளையும் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தி வந்த பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர். அதோடு இந்த அரிய வகை உயிரினங்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல், மருத்துவ சான்றிதழ்கள் போன்றவைகளும் இல்லாமல், கொண்டுவரப்பட்டிருந்தன. இதனால் இந்த விலங்குகளை நமது நாட்டிற்குள் அனுமதித்தால், வெளிநாட்டு நோய் கிருமிகள் நமது நாட்டில் உள்ள விலங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் பரவும் ஆபத்துள்ளது என்று தெரிய வந்தது.

எனவே இந்த உயிரினங்களை மீண்டும் எந்த விமானத்தில் சென்னைக்கு வந்ததோ, அதே விமானத்தில், தாய்லாந்து நாட்டிற்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கின்றனர். அதற்கான செலவுகளை இந்த விலங்குகளை சட்டவிரோதமாக கடத்தி வந்த பயணியிடம் வசூலிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த விலங்குகளை சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு வந்த, சென்னையைச் சேர்ந்த அந்தப் பயணியை கைது செய்து, அவர் மீது சுங்கச் சட்டம் மற்றும் அரிய வகை உயிரினங்களை சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு வரும் தடை சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

Advertisement