தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் முக்கிய சாலைகளில் தடுப்பு சுவர்களில் விளம்பரம் எழுதுவதை தடுக்க வேண்டும்

 

Advertisement

கரூர், ஜூலை 18: கரூர் முக்கிய சாலைகளில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புச் சுவர்கள் விளம்பர சுவர்களாக மாறி வருவதை கண்காணித்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிககுட்பட்ட சுங்ககேட் காந்திகிராமம், சுங்ககேட் தாந்தோணிமலை, திருமாநிலையூர் சுக்காலியூர், மனோகரா கார்னர் திருக்காம்புலியூர், திண்ணப்பா கார்னர் முதல் சர்ச் கார்னர் வரை என மாநகரின் முக்கிய சாலைகளில் எளிதாக போக்குவரத்து நடைபெறும் வகையில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், பல்வேறு தனியார் அமைப்புகள் மற்றும் சில அரசியல் அமைப்புகளின் சார்பில் தடுப்புச்சுவரில் விளம்பர நோட்டீஸ்கள் அதிகளவு ஓட்டப்பட்டு வருகிறது. இதுபோன்ற நோட்டீஸ்கள் ஒட்டப்படுவதால், வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனக் கூறப்படுகிறது. எனவே, பெரும்பாலான பகுதிகளில் தடுப்புச் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்ற வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement