தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகர்கோவிலில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி மாணவர் சேர்க்கை தொடக்கம்

 

Advertisement

நாகர்கோவில்,மே 26: நாகர்கோவில் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026 ம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி மாணவர்கள் சேர்க்கை 15ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது குறித்து கன்னியாகுமரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: குமரி மாவட்டத்தில் செயல்படும் நாகர்கோவில் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26ம் ஆண்டிற்கான ஓராண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பபயிற்சி சேர்க்கை 15.05.2025 முதல் 20.06.2025 வரை நடைபெறுகிறது. இப்பயிற்சி இரண்டு பருவங்களைக் கொண்டது. பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் 10ம் வகுப்புடன் 3 ஆண்டு பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு பயின்றவர்கள் இப்பயிற்சியில் சேரலாம். 17 வயது பூர்த்தி அடைந்தவர்கள் www.tncu.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். கட்டணம் ரூ.100ஐ இணையவழியில் செலுத்த வேண்டும். நேரடியாக மற்றும் தபால் மூலம் விண்ணப்பிக்க இயலாது.

பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுகள் தமிழில் மட்டுமே நடைபெறும். இப்பயிற்சியில் சேரும் SC/ST, BC/MBC அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை பெற்று வழங்கப்படும். பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் சுய ஒப்பமிட்டு மேலாண்மை நிலையத்துக்கு நேரில் அல்லது பதிவுஅஞ்சல் ஒப்புகை அட்டையுடன் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்கள் பயிற்சிக் கட்டணம் ரூ.20,750ஐ ஒரே தவணையில் இணையவழியில் செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04652-278132 என்ற எண்ணில் அல்லது நாகர்கோவில் கூட்டுறவு மேலாண்மை நிலையம், கிறிஸ்டோபர் தெரு, நேசமணி நகரில் உள்ள கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News