தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சை அரசு பள்ளிகளில் செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்கள் சேர்க்கை

தஞ்சாவூர், ஜூன் 11: செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது. தஞ்சாவூர் மாவட்டம் மேம்பாலம் அருகில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சீருடை, பாட புத்தகங்கள், பாடக் குறிப்பேடுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் தங்கி படிக்க இலவச உணவுடன் கூடிய தனித்தனி விடுதி வசதி உள்ளது.

Advertisement

இங்கு அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் திறன் வகுப்பறைகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களின் வழியாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, செவித்திறன் குறைந்த மாணவ, மாணவிகள் இந்த பள்ளியில் சேர்த்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News