தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவசாயிகளுக்கு அட்மா திட்ட பயிற்சி

 

Advertisement

ஈரோடு, ஆக.3: ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை வட்டாரம், மாணிக்கம்பாளையத்தில் வேளாண்மைத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு அம்மாபேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.பவானி தலைமை வகித்தார். இதில், பயிர்களில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் தாவர பொருள்களின் பயன்பாடு குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. மானிய திட்டங்கள், சம்பா பருவத்தில் சாகுபடி செய்யும் நெல் ரகங்கள், உயிர் உரங்களின் பயன்பாடு, நுண்ணூட்டச்சத்து உரங்கள் பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்டவை குறித்து வேளாண்மை அலுவலர் ஜெயக்குமார் விளக்கமளித்தார். விதை தேர்வு முறைகள், விதை நேர்த்தி, சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்து விதைச்சான்று அலுவலர் நாசர் அலி விளக்கமளித்தார்.

உழவர் செயலி பயன்படுத்துதல் மற்றும் மானிய திட்டங்கள் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரபாகரன் செயல் விளக்கம் செய்து காண்பித்தார். மேலும், இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு மண் மாதிரி ஆய்வு செய்து அதற்கு ஏற்றார் போல், ரசாயன உரங்களை குறிப்பிட்ட அளவில் மட்டுமே பயன்படுத்தி, அதிக லாபம் பெறும் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர்கள் செய்திருந்தனர்.

Advertisement