தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு உரிய பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

சென்னை: சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். திருவலிக்கேணியில் லேடி வெலிங்டன் அரசு மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியை நேற்று காலை கமிஷனர் சந்தீப் ராய் ரத்ேதார் ஆய்வு செய்தார்.

Advertisement

பின்னர் அவர் அளித்த பேட்டி:

பொதுமக்கள் எந்த தடையும் இன்றி பாதுகாப்புடன் வாக்களிக்கும் வகையில் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம். சென்னை பெருநகர காவல்துறையுடன் 9 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தற்போதைய நிலவரப்படி 7 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் மீதமுள்ள 2 கம்ெபனி ராணுவ வீரர்கள் இன்று வருவார்கள்.

ஒரு தொகுதியில் பல இடங்களில் பதற்றமான வாக்குசாவடிகள் வருகிறது. இதனால் வழக்கமாக உள்ள வாக்குச்சாவடிகளுக்கு அளிக்கும் பாதுகாப்பை விட கூடுதலாக துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு வழங்கப்படும். அப்பகுதியில் பொதுமக்கள் எளிமையாக வந்து செல்லும் வகையில் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யவும் தனியாக குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News