தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூத்து குலுங்கும் செண்டி பூக்கள் அரிமளம் பகுதியில் விபத்தை குறைக்கும் வகையில் கூடுதல் வேகத்தடை அமைக்க வேண்டும்

திருமயம்,ஜூன் 25: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் இருந்து செங்கீரை வழியாக ராயவரம் செல்லும் சாலை மாவட்டத்தில் உள்ள பிரதான சாலைகளில் ஒன்று. இந்த சாலைகளில் கடந்த சில ஆண்டுகளாக வாகன போக்குவரத்து, டிப்பர் லாரிகளின் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அரிமளம் பகுதியில் அவ்வப்போது விபத்துக்கள் நடைபெறுவதாக புகார் எழுந்து வந்தது. இதனிடையே கடந்த வாரம் அரிமளத்தில் சம்பந்தப்பட்ட பகுதியில் டிப்பர் லாரி மோதி ஒருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது விபத்து ஏற்பட்ட பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு கொடுப்பதன் மூலம் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் அரிமளம் பகுதியைச் சேர்ந்த மக்கள் அரிமளம் மாமரத்து பஸ்ஸ்டாப், சேர்வராயன் பாலம் ஆகிய இரண்டு இடங்களிலும் விபத்தை குறைக்கும் வகையில் வாகன வேகத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதேபோல் அரிமளம் பகுதியில் வர்ணம் பூசப்படாமல் உள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் மனு அளித்து பல நாட்களைக் கடந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். எனவே இனிமேலாவது அப்பகுதி மக்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட பகுதியில் வேகத்தடை அமைக்கப்படும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement

Related News