தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெளி மாவட்ட குடும்ப அட்டைகளுக்கு கூடுதல் ஒதுக்கீடு

 

Advertisement

திருப்பூர், மார்ச் 10: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்கம் (சிஐடியு) நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் முழு ஒதுக்கீடு செய்து எடை குறைவில்லாமல் அனுப்பிட வேண்டும். மளிகை பொருட்கள் விற்பனையாளர்களிடம் தேவைப்பட்டியல் பெற்று தேவையான பொருட்கள் மட்டும் அனுப்பப்பட வேண்டும்.

வெளி மாவட்ட குடும்ப அட்டைகளுக்கு பெயர்வு விற்பனை மூலம் பொருட்கள் வழங்க கூடுதலாக 10% ஒதுக்கீடு செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி தொகையை மத்திய கூட்டுறவு வங்கியில் செலுத்தாமல் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த ரேஷன் கடைகளை சரி செய்து கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக இம்மாத இறுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. ஏப்ரல் 20ம் தேதி புதுக்கோட்டையில் நடைபெறும் மாநாட்டில் ரேஷன் கடை பணியாளர்களை திருப்பூரில் இருந்து திரளாக கலந்து கொள்ள செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் சுரேஷ், துணைத் தலைவர் கருப்புசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News